கோவை மதுக்கரை ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே உள்ள மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: மதுக்கரை அடுத்த மோகன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் ஆனது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கோவை குனியமுத்தூர் மயில்கல் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய வினித்தை வீட்டிலிருந்தவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வினித் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...