வடவள்ளியில் ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை - 2 பேர் கைது

கோவை வடவள்ளியில் பள்ளி ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 8 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சுண்டபாளையம் ஹர்ஷினி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அன்பு சிவா.

இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது41). இவர் வடவள்ளி மருதமலை தேவஸ்தானம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த மார்ச் 23ஆம் தேதி வழக்கம்போல் பாக்கியலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,000 மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதையடுத்து, திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் செல்போன் சிக்னல்களை வைத்து திருட்டில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் மகன் பிரகாஷ் (33), அன்னூர் செல்லனுர் புது காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் பிரகாஷ் (26) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தது உறுதியானது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 8 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...