பொது இ-சேவை மையத்தில் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெறலாம் என ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் வண்ணப்புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பிளாஸ்டிக் ஆதார்கார்டு போன்றவற்றை பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக மக்கள் சிரமமின்றி எளிதாக சான்றிதழ்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதே பொது இ-சேவை மையமாகும். இந்த திட்டம் அனைத்து வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 231 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 1,38,995 சாதிச் சான்றிதழ்களும், 1,82,037 வருமான சான்றிதழ்கள், 6,67,93 இருப்பிட சான்றிதழ், 10405 முதல்பட்டதாரி சான்றிதழ், 61 கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், 33,239 பட்டா மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண உதவித்தொகை விண்ணப்பித்தல், 2 பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தல், மின்கட்டணம், பிளாஸ்டிக் ஆதார் அட்டை எடுத்தல் போன்ற பல்வேறு வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தற்போது வண்ணப்புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளும் ரூ.50 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை உள்ள பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தெரிவித்து வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையாக புதுப்பித்துக்கொள்ளலாம்.

மேலும், இச்சேவை மையங்களிலேயே ஏற்கனவே ஆதார் எண் உள்ளவர்கள் புதிய ஆதார் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம்" என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...