குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் சாலையோரம் சடலமாக மீட்பு!

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் நாகராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: குனியமுத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர், சாலையோரம் சடலமாக மீட்கப்பட்டார்.

கோவை குனியமுத்தூர் ரைஸ் மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் சிறு வயதில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் அதே பகுதிகளில் வசித்து வருவதால் அனைவரும் கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை நாகராஜ் சாலையில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் நாகராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...