கோவை அருகே சந்தனமரம் வெட்டிக்கடத்தல் - 7 பேரை கைது செய்த வனத்துறை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் சந்தன மர திருட்டில் ஈடுபட்ட 7 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் கூடலூர் கிராமத்தில் அரசு நிலத்தில், கட்டுமானம் ஏற்படுத்த, அங்கிருந்த பல மரங்களை வெட்டும்பொழுது,

அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்திச் சென்று விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மரங்களை வெட்டி கடத்திச் சென்ற 7 நபர்களை பிடித்து, கடத்திச் சென்ற 4 சந்தன மரத் துண்டுகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு வனத்துறையினர், கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் இரு எதிரிகளுக்கு தலா ரூ.25,000/- வீதமும், வெட்டிக் கடத்தும் பணிக்கு உறுதுணையாக இருந்த மற்ற ஐந்து எதிரிகளுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஆக மொத்தம் ரூ.1,00,000/- அபராதம் விதித்தனர்.

Newsletter

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...