கோவை அருகே சந்தனமரம் வெட்டிக்கடத்தல் - 7 பேரை கைது செய்த வனத்துறை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் சந்தன மர திருட்டில் ஈடுபட்ட 7 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் கூடலூர் கிராமத்தில் அரசு நிலத்தில், கட்டுமானம் ஏற்படுத்த, அங்கிருந்த பல மரங்களை வெட்டும்பொழுது,

அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்திச் சென்று விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மரங்களை வெட்டி கடத்திச் சென்ற 7 நபர்களை பிடித்து, கடத்திச் சென்ற 4 சந்தன மரத் துண்டுகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு வனத்துறையினர், கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் இரு எதிரிகளுக்கு தலா ரூ.25,000/- வீதமும், வெட்டிக் கடத்தும் பணிக்கு உறுதுணையாக இருந்த மற்ற ஐந்து எதிரிகளுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஆக மொத்தம் ரூ.1,00,000/- அபராதம் விதித்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...