இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக ஓடி வந்து உதவிய கோவை போலீசார்!

உதகையைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க பாண்டிச்சேரிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர். மருத்துவமனை முதல் விமான நிலையம் வரையில் வேகமாக செல்வதற்காக கோவை மாவட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி உதவி செய்தனர்.


கோவை: உதகையைச் சேர்ந்த பெண்ணை விமான நிலையம் மூலம் பாண்டிச்சேரிக்கு கொண்டு செல்ல மாவட்ட போக்குவரத்து சார்பில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வழிவகை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியில் வசிக்கும் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக உயர் சிகிச்சை அளிக்க உடனடியாக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் அழைத்துச் செல்ல வேண்டி இருந்ததால் அப்பெண்ணின் குடும்பத்தார் கோவை மாவட்ட காவல் துறையினரை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் பாண்டிச்சேரிக்கு எந்தவித போக்குவரத்து இடையூறும் இன்றி விரைவாக செல்ல உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் துறையினர் ஆகியோர் இணைந்து மேற்படி பாதிக்கப்பட்ட பெண் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு சாலையில் எந்தவித இடையூறும் இன்றி செல்ல வழிவகை ஏற்படுத்தி கொடுத்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினரை மனதார பாராட்டினர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...