கோவையில் கனமழை காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மேம்பாலங்களுக்கு அடியில் அதிகளவிலான கழிவுகள் தேக்கமடைந்துள்ள நிலையில் அதனை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



குறிப்பாக கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீருடன் சேர்ந்து, சாக்கடை நீரும் தேங்கி நின்றதால் மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றிரவு அந்த மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.



தற்போது மேம்பாலத்திற்கு அடியில் தேக்கமடைந்து இருக்கும் மண் மற்றும் கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அனைத்து மேம்பாலங்களிலும் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இந்த பணிகள் காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...