கோவையில் கனமழை காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கிய கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மேம்பாலங்களுக்கு அடியில் அதிகளவிலான கழிவுகள் தேக்கமடைந்துள்ள நிலையில் அதனை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



குறிப்பாக கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீருடன் சேர்ந்து, சாக்கடை நீரும் தேங்கி நின்றதால் மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்றிரவு அந்த மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.



தற்போது மேம்பாலத்திற்கு அடியில் தேக்கமடைந்து இருக்கும் மண் மற்றும் கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அனைத்து மேம்பாலங்களிலும் கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



இந்த பணிகள் காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...