கோவையில் வடக்கு மண்டல சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.8.80 லட்சம் வழங்கல்!

கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27க்கு உட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌, தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம்‌ (CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்வதற்காக தனியார்‌ நிறுவனத்தினர்‌ சார்பில் கோவை‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் ரூ.8.80 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் தனியார் பங்களிப்புடன் 4 சாலைகள் அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் 8.80 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் வழங்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலம் வார்டு எண்‌.27-க்குட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம் ‌(CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.



இதற்காக AMERITORE INFRA PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம், TEX-TECH INDUSTRIES PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம் மற்றும் SRI VENKATESWARA CARBONIC GASES PVT LTD சார்பில் ரூ.2.50 லட்சம் மற்றும் AATHAVA GARMENTS INDIA PVT LTD சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.8.80 லட்சம்‌ வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம், ரூ.8.80 லட்சம் மதிப்பிலான காசோலை தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வின் போது 27வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ அம்பிகா தனபால்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனத்தினர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...