கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மழைநீர்‌ வடிகாலில்‌ உள்ள செடி கொடிகளை போர்கால அடிப்படையில்‌ உடனடியாக அகற்றி தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண் 18க்கு உட்பட்ட நல்லாம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர்‌ வடிகாலை மேயர் கல்பனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில்‌ தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌, பொது கழிப்பறை கட்டிடத்திற்கு, உரிய இடத்தினை தேர்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார்‌ செய்திடவும்‌ சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



இதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில்‌ உள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்கு உட்பட்ட கணபதி பகுதியில்‌ உள்ள மழைநீர் வடிகாலினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகாலில்‌ உள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...