கோவை ரேஸ்கோர்ஸில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் - அகற்றும் பணி தீவிரம்!

கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய்கள் நிரம்பிய நிலையில், சாலைகளில் கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கழிவுநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாக்கடை கால்வாய் நிறைந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



கோவையில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நிறைந்து, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர் லாரிகள் மூலம் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...