கோவை ரேஸ்கோர்ஸில் சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் - அகற்றும் பணி தீவிரம்!

கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் பெய்த கனமழையின் காரணமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய்கள் நிரம்பிய நிலையில், சாலைகளில் கழிவுநீர் வெளியேறியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கழிவுநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் நேற்று பெய்த கனமழையால் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாக்கடை கால்வாய் நிறைந்து கழிவு நீர் சாலையில் வழிந்தோடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



கோவையில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நிறைந்து, கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை ஓரத்தில் கழிவு நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர் லாரிகள் மூலம் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்புகளை சீர் செய்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...