கேரளாவிலிருந்து கடத்தி வந்த கஞ்சா பறிமுதல் - கோவையில் 2 பேர் கைது

கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை தடாகம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முத்துராஜ் மற்றும் ரஞ்சித் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் தடாகம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் ஜனா, ராமு, வசந்த் உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் இருவரும் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் சத்தியமங்களத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பது உறுதியானது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்தி வந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...