கேரளாவிலிருந்து கடத்தி வந்த கஞ்சா பறிமுதல் - கோவையில் 2 பேர் கைது

கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து கடத்திவரப்பட்ட கஞ்சாவை தடாகம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முத்துராஜ் மற்றும் ரஞ்சித் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் தடாகம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காவலர்கள் ஜனா, ராமு, வசந்த் உள்ளிட்ட காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேரள மாநிலம் கோட்டத்துறையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் இருவரும் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் சத்தியமங்களத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பது உறுதியானது. இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்தி வந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...