பல்லடத்தில் நேபாள இளைஞரைத் தாக்கிய ரவுடிகள் - புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில் நகரில் வட மாநில தொழிலாளர் என நினைத்து குஷால் என்ற நேபால் இளைஞரை ரவுடிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயத்துடன் நேபால் இளைஞர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில்நகரில் வசித்து வருபவர் குஷால். நேபாளத்தை சேர்ந்த இவர், தனது மனைவி ஜெசி, தனது மகன்கள் யாசர் அராபட் மற்றும் ரியாஸ் ஆகியோருடன் மேற்கு பல்லடத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதப்பூர் அருகே உள்ள செந்தில் நகருக்கு குடியேறியுள்ளார். 15 ஆண்டுகளாக பல்லடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த குஷால், தற்போது வேலை தேடி வருகிறார்.



இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமணி மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் குஷாலிடம் உனக்கு வேலை வாங்கி தருகிறோம் எனவும், வட மாநில இளைஞர்களை எங்களிடம் அழைத்து வா எனவும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

நான் நேபாளத்தை சேர்ந்தவன் எனவும், வட மாநில தொழிலாளர்கள் எனக்கு யாரும் தெரியாது என குஷால் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் குஷாலின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குஷாலின் இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.



படுகாயம் அடைந்த குஷாலை மீட்டு அவரது மனைவி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனக்கும் தனது குடும்பத்தின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் படுகாயம் அடைந்த குஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் மீது ஏற்கனவே பல்லடம் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதாக வைரலான வீடியோ குறித்த வழக்கும், வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...