பல்லடத்தில் நேபாள இளைஞரைத் தாக்கிய ரவுடிகள் - புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில் நகரில் வட மாநில தொழிலாளர் என நினைத்து குஷால் என்ற நேபால் இளைஞரை ரவுடிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காயத்துடன் நேபால் இளைஞர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் செந்தில்நகரில் வசித்து வருபவர் குஷால். நேபாளத்தை சேர்ந்த இவர், தனது மனைவி ஜெசி, தனது மகன்கள் யாசர் அராபட் மற்றும் ரியாஸ் ஆகியோருடன் மேற்கு பல்லடத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதப்பூர் அருகே உள்ள செந்தில் நகருக்கு குடியேறியுள்ளார். 15 ஆண்டுகளாக பல்லடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த குஷால், தற்போது வேலை தேடி வருகிறார்.



இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமணி மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் குஷாலிடம் உனக்கு வேலை வாங்கி தருகிறோம் எனவும், வட மாநில இளைஞர்களை எங்களிடம் அழைத்து வா எனவும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

நான் நேபாளத்தை சேர்ந்தவன் எனவும், வட மாநில தொழிலாளர்கள் எனக்கு யாரும் தெரியாது என குஷால் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் குஷாலின் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குஷாலின் இரு சக்கர வாகனத்தையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.



படுகாயம் அடைந்த குஷாலை மீட்டு அவரது மனைவி, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனக்கும் தனது குடும்பத்தின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் படுகாயம் அடைந்த குஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அன்புமணி மற்றும் வீரமணி ஆகியோர் மீது ஏற்கனவே பல்லடம் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசுவதாக வைரலான வீடியோ குறித்த வழக்கும், வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...