தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் மே தின ஊர்வலம்!

மே தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் திருப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

மே 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மே தின தொழிலாளர் பேரணி நடைபெற்றது.



இதில் பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மே தின முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.



பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தொழிலாளர்களுக்கு ஆறு மணி நேர வேலையாக சமமாக மாற்றக்கோரியும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான இ எஸ் ஐ, பி எப் பிடித்தம் செய்வதை உறுதி செய்துவிட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள தொழிலாளர்களை 14 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெளிமாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு வந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மே தின ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...