பல்லடத்தில் உழைப்பாளர் தினத்தில் அரங்கேறிய விபத்து - ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தொழிலாளி காயம்!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் செயல்பட்டு வரும் E-STAR என்ற டீ தூள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியில் உள்ள 24 கழிப்பறைகள் இன்று அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற உழியர் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறை இடிந்து விழுந்ததில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள எம்.வி.எஸ் நகரில் E-Star என்ற டீ தூள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.



ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக 24 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.



இன்று அதிகாலை திடீரென 24 கழிப்பறைகளும் முழுவதுமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.



இந்த விபத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு காலில் காயமடைந்த நிலையில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரமான அஸ்திவாரம் போடாமலேயே கழிப்பறைகள் கட்டப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் தினத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...