பல்லடத்தில் உழைப்பாளர் தினத்தில் அரங்கேறிய விபத்து - ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தொழிலாளி காயம்!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் செயல்பட்டு வரும் E-STAR என்ற டீ தூள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியில் உள்ள 24 கழிப்பறைகள் இன்று அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற உழியர் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறை இடிந்து விழுந்ததில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள எம்.வி.எஸ் நகரில் E-Star என்ற டீ தூள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.



ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக 24 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.



இன்று அதிகாலை திடீரென 24 கழிப்பறைகளும் முழுவதுமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.



இந்த விபத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு காலில் காயமடைந்த நிலையில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரமான அஸ்திவாரம் போடாமலேயே கழிப்பறைகள் கட்டப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் தினத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...