உடுமலை தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது

உடுமலையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் ரூ.4லட்சம் பணத்தை கொள்ளையடித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரபாகரனை(29) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் தனியார் நிறுவனத்தில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (32). இவர் உடுமலை எலைய முத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி இரவு வேலையை முடித்துக்கொண்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ.4 லட்சத்து12 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (29) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...