தாராபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

தாராபுரம் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே கோவிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுப்பை கிராமத்தில் பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபா ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுப்பை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக பூஜை செய்யாமல் வந்தனர். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் சார்பில் வருடம் தோறும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனை பொறுத்துக் கொள்ளாத மூன்று குலத்தவர்கள் வேண்டுமென்றே பூஜையை நிறுத்துவதற்காக வழக்கு தொடர்ந்தனர். அப்போது இரு தரப்பினரும் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு அன்னதானம் நடைபெறும் போது கோவில் மண்டபத்தை பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்து வருவதாக குலத்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...