தாராபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

தாராபுரம் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே கோவிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுப்பை கிராமத்தில் பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபா ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுப்பை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக பூஜை செய்யாமல் வந்தனர். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் சார்பில் வருடம் தோறும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனை பொறுத்துக் கொள்ளாத மூன்று குலத்தவர்கள் வேண்டுமென்றே பூஜையை நிறுத்துவதற்காக வழக்கு தொடர்ந்தனர். அப்போது இரு தரப்பினரும் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு அன்னதானம் நடைபெறும் போது கோவில் மண்டபத்தை பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்து வருவதாக குலத்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...