பொள்ளாச்சி அருகே மின் கசிவால் தீவிபத்து - ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தில் பிரபு என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தாயுடன் வேலைக்கு சென்ற நிலையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றுலுமாக எரிந்து சேதமடைந்த நிலையில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கோவை: பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, நண்பகல் நேரத்தில், பிரபுவின் வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீடு தீப்பற்றி எரிந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. தீ விபத்திற்கு வேறு எதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...