பொள்ளாச்சி அருகே மின் கசிவால் தீவிபத்து - ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தில் பிரபு என்பவர் வீட்டை பூட்டிவிட்டு தாயுடன் வேலைக்கு சென்ற நிலையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முற்றுலுமாக எரிந்து சேதமடைந்த நிலையில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கோவை: பொள்ளாச்சி அருகே சிங்காநல்லூர் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த சிங்காநல்லூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தாய் மகுடீஸ்வரியுடன் வசித்து வருகிறார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.



இந்நிலையில், இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது, நண்பகல் நேரத்தில், பிரபுவின் வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதன் காரணமாக வீடு தீப்பற்றி எரிந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. தீ விபத்திற்கு வேறு எதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...