உடுமலை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நடைபாதை - உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய நடைபாதையின் தரைப்பகுதி மற்றும் கைப்பிடி சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் மையப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்றுப்புற கிராமங்கள், மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றது.

இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது.



பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாமல் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடியானது பல மாதங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.



மேலும் நடைபாதை அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதுமக்களுக்காக தொடங்கப்படுகின்ற எந்த ஒரு சேவையும் திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பாதசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...