தமிழக சிறைகளில் 2,000 கைதிகளுக்கு ஒரே மாதத்தில் யோகா கற்றுக் கொடுத்த ஈஷா!‌

சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள 73 சிறைகளில்‌ உள்ள  2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலனை பாதுகாக்கவும் ஈஷா சார்பில்‌ யோகாசன பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது.


கோவை: ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்று கொடுக்கப்பட்டு உள்ளது.

சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்‌ மன அழுத்தம்‌, உடல்‌ நல‌ பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌.

இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளி வர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.



அதன்படி, நடப்பு ஏப்ரல்‌ மாதத்தில்‌ மட்டும்‌ சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில்‌ உள்ள மத்திய சிறைகள்‌, பிற மாவட்டங்களில்‌ உள்ள மாவட்ட சிறைகள்‌ மற்றும்‌ கிளை சிறைகள்‌ என மொத்தம்‌ 73 சிறைகளில்‌ சிறப்பு யோகா வகுப்புகள்‌ நடத்தப்பட்டன.



சத்குருவால்‌ பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள்‌ சிறைக்கு நேரில்‌ சென்று உயிர்‌ நோக்கம்‌, உப யோகா, சூரிய சக்தி போன்ற வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தனர்‌.



இவ்வகுப்புகளில்‌ ஆண்கள்மற்றும்‌ பெண்கள்‌ கைதிகள்‌ மிகுந்த ஆர்வத்துடன்‌ பங்கேற்றனர்‌. இப்பயிற்சிகளை சிறை கைகிகள்‌ தினமும்‌ செய்து வருவதன்‌ மூலம்‌ மன அழுத்த‌ பாதிப்பில்‌ இருந்து விடுபட முடியும்‌.

மேலும்‌, முதுகுத்தண்டு வலுப்பெறும்‌, மூட்டு வலியில்‌ இருந்து விடுதலை பெறலாம்‌. உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும் என ஈஷா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...