12 மணி நேர வேலை சட்ட நகலை எரித்து திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்!

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், தமிழக அரசின் சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்திற்கு எதிராக திருப்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 21ஆம் தேதி அன்று, 8 மணி நேர வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றும் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது . இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில் தமிழக அரசு உடனடியாக இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாநில செயலாளர் சிங்காரவேலன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழக அரசின் தொழிலாளர் சட்ட திருத்த மசோதா நகலை எரித்து தங்களை எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



இதன் காரணமாக திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...