முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா - பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வன விலங்குகள் உணவுதேடி சாலை ஓரத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது. அவற்றை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. புலிகள், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கோடை காலம் என்பதால், வனவிலங்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெற தொடங்கியுள்ளன.



குறிப்பாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு தேடி மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன.



சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேயும் இந்த வனவிலங்குகளை, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



குறிப்பாக, சாலை ஓரத்தில் சுற்றி தெரியும் ஆண் மயில்கள், அடிக்கடி பெண் மயில்களை கவரும் வகையில் தோகை விரித்தாடுவதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...