முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா - பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வன விலங்குகள் உணவுதேடி சாலை ஓரத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது. அவற்றை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. புலிகள், காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன.

தற்போது கோடை காலம் என்பதால், வனவிலங்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெற தொடங்கியுள்ளன.



குறிப்பாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு தேடி மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலைக்கு வரத் தொடங்கியுள்ளன.



சாலை ஓரத்தில் உள்ள புற்களை மேயும் இந்த வனவிலங்குகளை, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.



குறிப்பாக, சாலை ஓரத்தில் சுற்றி தெரியும் ஆண் மயில்கள், அடிக்கடி பெண் மயில்களை கவரும் வகையில் தோகை விரித்தாடுவதை ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...