வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநிலத்தொழிலாளர் காயம் - கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அனில் ஓரான் என்ற வட மாநில தொழிலாளர் காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று 35 வது தேயிலை த்தோட்ட பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது லேசான காயங்களுடன் தப்பினார்.

இன்று அதே 35 வது தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளரான அனில் ஓரான் (வயது 26). இவரை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை காலில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.



அப்பகுதியில் ஆய்வுக்காக சென்றிருந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி சிறுத்தை தாக்கியவரை காப்பாற்றி, அவரது வாகனத்தில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.



காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவும் ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அனில்ஓரான், கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆறு, சிறுகுன்றா நல்ல காத்து போன்ற எஸ்டேட் பகுதிகளில் பகுதிகளில் வால்பாறை பகுதியில் வளர்க்கப்படும் 100 க்கு மேற்பட்ட மாடுகள், தேயிலை த்தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அந்த மாடுகளை சிறுத்தைகள் வேட்டையாடுவதால், ஆங்காங்கே தேயிலை தோட்டத்தில் மாடுகள் இறந்து கிடக்கின்றன.

இதை, சிறுத்தை சாப்பிட வரும்பொழுது மனிதர்கள் அப்பகுதியில் வேலைக்கு வந்தால், அவர்களையும் சிறுத்தை தாக்குகிறது. இதனால், வீட்டில் வளர்க்கும் மாடுகளை தேயிலைத்தோட்டத்தில் விடாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...