வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநிலத்தொழிலாளர் காயம் - கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அனில் ஓரான் என்ற வட மாநில தொழிலாளர் காயமடைந்தார். அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று 35 வது தேயிலை த்தோட்ட பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது லேசான காயங்களுடன் தப்பினார்.

இன்று அதே 35 வது தோட்டப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளரான அனில் ஓரான் (வயது 26). இவரை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை காலில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.



அப்பகுதியில் ஆய்வுக்காக சென்றிருந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி சிறுத்தை தாக்கியவரை காப்பாற்றி, அவரது வாகனத்தில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.



காலில் பலத்த காயமடைந்து எலும்பு முறிவும் ஏற்பட்டதால் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அனில்ஓரான், கோவை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆறு, சிறுகுன்றா நல்ல காத்து போன்ற எஸ்டேட் பகுதிகளில் பகுதிகளில் வால்பாறை பகுதியில் வளர்க்கப்படும் 100 க்கு மேற்பட்ட மாடுகள், தேயிலை த்தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. அந்த மாடுகளை சிறுத்தைகள் வேட்டையாடுவதால், ஆங்காங்கே தேயிலை தோட்டத்தில் மாடுகள் இறந்து கிடக்கின்றன.

இதை, சிறுத்தை சாப்பிட வரும்பொழுது மனிதர்கள் அப்பகுதியில் வேலைக்கு வந்தால், அவர்களையும் சிறுத்தை தாக்குகிறது. இதனால், வீட்டில் வளர்க்கும் மாடுகளை தேயிலைத்தோட்டத்தில் விடாமல் தடுக்கவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...