வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில பெண் ஊழியர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளி சீதாமுனிகுமாரியை சிறுத்தை ஒன்று தாக்கியதில், கை மற்றும் கால்களில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வடமாநில பெண் ஊழியர் ஒருவர் சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே அடிக்கடி சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளி சீதாமுனிகுமாரி (22), சிறுகுன்றா பகுதியில் உள்ள 35வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



இந்நிலையில், காயமடைந்த வடமாநில பெண்ணை வால்பாறை வன துறையினர், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் சரவண பாண்டியன், வினோத்குமார், டேன்சிங், ஜெயராம் ஆகியோர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...