வால்பாறை அருகே சிறுத்தை தாக்கியதில் வடமாநில பெண் ஊழியர் காயம் - மருத்துவமனையில் அனுமதி!

வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருந்த வடமாநில பெண் தொழிலாளி சீதாமுனிகுமாரியை சிறுத்தை ஒன்று தாக்கியதில், கை மற்றும் கால்களில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே வடமாநில பெண் ஊழியர் ஒருவர் சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே அடிக்கடி சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகேயுள்ள சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளி சீதாமுனிகுமாரி (22), சிறுகுன்றா பகுதியில் உள்ள 35வது நம்பர் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று இவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நிலையில், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



இந்நிலையில், காயமடைந்த வடமாநில பெண்ணை வால்பாறை வன துறையினர், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் நகரமன்ற துணை தலைவர் செந்தில்குமார், நகர துணை செயலாளர் சரவண பாண்டியன், வினோத்குமார், டேன்சிங், ஜெயராம் ஆகியோர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்டறிந்து வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...