வால்பாறை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு நிதியுதவி

வால்பாறை அருகே வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் 89 வீடுகளுக்கு உறுதியான கூரை அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR) ரூ.14.86 லட்சத்திற்கான காசோலை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை தாலுகாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள் கட்டுவதற்கு தனியார் நிறுவனங்கள் இணைந்து நிதி வழங்கின.

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் ஆழமான வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள 89 வீடுகளுக்கு உறுதியான கூரை வீடுகள் அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR)ரூ.14.86 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் வழங்கின.



வால்கரோ இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிட் நிறுவனத்தின் சார்பில் 2.65லட்சம், ஹேமலதா அண்ணாமலை சார்பில் ரூ. 3.30 லட்சம், மெய்நிகர் மீட்புப் படை (VRF) சார்பில் 1.41 லட்சம், டாக்டர் விஜயா சார்பில் ரூ.7.5 இலட்சம் என மொத்தம் ரூ.14.86 லட்சம் வழங்கிய அனைவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மேலும், இன்னும் மூன்று பழங்குடியின குடியேற்றங்களுக்கு இதுபோன்று கூரைகள் அமைக்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியினை அளித்து உதவ முன்வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...