வால்பாறை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு நிதியுதவி

வால்பாறை அருகே வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் 89 வீடுகளுக்கு உறுதியான கூரை அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR) ரூ.14.86 லட்சத்திற்கான காசோலை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை தாலுகாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள் கட்டுவதற்கு தனியார் நிறுவனங்கள் இணைந்து நிதி வழங்கின.

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் ஆழமான வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள 89 வீடுகளுக்கு உறுதியான கூரை வீடுகள் அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR)ரூ.14.86 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் வழங்கின.



வால்கரோ இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிட் நிறுவனத்தின் சார்பில் 2.65லட்சம், ஹேமலதா அண்ணாமலை சார்பில் ரூ. 3.30 லட்சம், மெய்நிகர் மீட்புப் படை (VRF) சார்பில் 1.41 லட்சம், டாக்டர் விஜயா சார்பில் ரூ.7.5 இலட்சம் என மொத்தம் ரூ.14.86 லட்சம் வழங்கிய அனைவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மேலும், இன்னும் மூன்று பழங்குடியின குடியேற்றங்களுக்கு இதுபோன்று கூரைகள் அமைக்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியினை அளித்து உதவ முன்வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...