தாராபுரம் அருகே மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த நெகிழிக்கான மாற்று பொருள் கண்காட்சி!

தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் இயற்கை பொருள் கண்காட்சி மற்றும் நெகிழிக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருள் கண்காட்சி நடைபெற்றது.

நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நெகிழிக்கு மாற்றாக இயற்கை பொருள் கண்காட்சி மற்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் வரலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா கந்தசாமி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் சிறப்புரையாற்றிய நிலையில், தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம், மூலனூர், குண்டடம், பொங்கலூர் வட்டார மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க பொறுப்பாளர்கள், சுய உதவி குழுக்கள் உறுப்பினர்கள் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நெகிழி ஒழிப்பு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், நெகிழியை பற்றியும், நெகிழியால் ஏற்படும் கொடிய நோய்களை பற்றியும் மாசற்ற தமிழகத்தை உருவாக்க நெகிழியை ஒழிப்போம் என்று உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...