உணவில் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்..! - சத்குரு அறிவுரை

கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், பாரம்பரியமான சிறுதானியங்களை நம்‌ உணவில்‌ சேர்த்துக்கொள்ள வேண்டும்‌ என வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கோவை ஈஷா மைய நிறுவனர்‌ சத்குரு, தமிழக மக்களுக்கு தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில், 'உலகத்தில்‌ உள்ள அனைத்து தமிழர்களுக்கும்‌ தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்‌. நம்‌ தமிழ்க்கலாச்சாரத்தில்‌, மண்ணை 'தாய்‌ மண்‌' எனச்‌ சொல்லுகிறோம்‌. ஏனெனில்‌, அந்தக் காலத்திலிருந்தே மண்‌ நம்‌ உயிருக்கு மூலமானது, நம்‌ தாய்‌ போல என்று உணர்ந்து, நாம்‌ பல்லாயிரம்‌ வருடங்களாக விவசாயம்‌ செய்து வருகிறோம்‌.

தமிழ்‌ மக்களுக்கு விவசாயத்தில்‌ மிகவும்‌ ஆழமான அனுபவம்‌ உள்ளது. அப்படி இருப்பினும்‌, கடந்த இருபது, முப்பது வருடங்களில்‌ நம்‌ மண்ணைக்‌ காப்பாற்றாமல்‌ விட்டுவிட்டோம்‌.

நம்‌ மணணைக்காக்க, நாம்‌ அனைவரும்‌ கம்பு, வரகு, சாமை, ராகி உள்ளிட்ட சிறுதானியங்களை நம்‌ உணவில்‌ சேர்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஏனெனில்‌, சிறுதானியங்கள்‌ வளரும்‌ இடத்தின்‌ மண்‌ வளமாகவே இருக்கும்‌. மேலும்‌, தமிழ்‌ என்பது வெறும்‌ மொழி மட்டுமல்ல. இது ஒரு பெருமை, இது ஒரு திறமை.

திறமை என்றால்‌ ஏதோ ஒரு செயல்‌ மட்டும்‌ இல்லை. நாம்‌ வாழும்‌ முறையிலேயே நம்‌ திறமை காட்டப்படவேண்டும்‌. நம்‌ தமிழ்‌ கலாச்சாரத்தில்‌, இலக்கியத்தில்‌, எல்லா இடங்களிலும்‌, சித்தர்‌, சீடர்‌, யோகிகள்‌ என இருந்தனர்‌. உள்நிலையில்‌ எப்படி இருக்கிறோம்‌ என்பது முக்கியம்‌ என்பதால்‌, ஒரு ஊரை உருவாக்கும்‌ முன்னரே அங்கு கோயிலை உருவாக்கினோம்‌.

பொருளாதாரம்‌, குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றையும்விட முக்கியமானது நமது ஆன்மீகம்‌. நாமே ஒரு கோயிலாக வாழவேண்டும்‌ என்பதாலேயே, தமிழ்நாட்டின்‌ குறியீடாக ஒரு கோயிலை வைத்துள்ளோம்‌. இதுதான்‌ தமிழ்‌ கலாச்சாரம்‌. இந்த தமிழ்‌ புத்தாண்டில்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ எனது ஆசியும்‌, வாழ்த்துக்களும்‌' எனக்‌ கூறியுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...