உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி தலைவர் பதவி நீக்க கருத்து கேட்புக்கூட்டம் ஒத்திவைப்பு!

உடுமலை அருகேயுள்ள போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முறைகேட்டில் ஈடுபட்டதால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் போதியளவு உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், வட்டாட்சியர் கண்ணாமணி கூட்டத்தை வருகின்ற 24ஆம் தேதி ஒத்திவைத்தார்.


திருப்பூர்: போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்செய்வது தொடர்பாக நடந்த கருத்துக் கேட்புக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் திமுகவை சேர்ந்த சௌந்தர்ராஜன், பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்திய நிலையில், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை என அறிக்கை அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அவர் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி கருத்து கேட்புக் கூட்டம் இன்று போடிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், உடுமலை வட்டாட்சியர் கண்ணாமணி தலைமையில் நடைபெற்றது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில் போடிபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் உடல்நிலை சரியில்லை எனக் கூறி கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வராத காரணத்தால் வருகின்ற 24ஆம் தேதி கருத்து கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கருத்து கேட்புக் கூட்டத்திற்கு உடுமலை காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...