கோவை கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தம் - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு சிறப்பு தனிப்படை அமைத்துள்ள நிலையில், கோவை கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கனிம வள கொள்ளை குறித்து செய்திகள் வெளியாகியது. இதை தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளது.

இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் தனிப்படை அமைத்தது முதல், கடந்த நான்கைந்து நாட்களாக குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் அள்ளப்படுவது குறைந்திருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்றி தெரிவித்து கடிதம் அளித்த விவசாயிகள், பாலக்காடு கணவாய்க்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் வழக்கமாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயம் சிறப்பாக இருந்தது.

கடந்த ஒரு வருட காலமாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குவாரிகளால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்த சூழலில் கடந்த வாரம் தமிழக அரசு கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிறப்பு தனிப்படைகளை அமைத்திருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குவாரிகளிலிருந்து கனிமவள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளின் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களும் விவசாயிகளும் சற்று நிம்மதி அடைந்திருக்கிறோம்.

அதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல் நிரந்தரமான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...