கோவை கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தம் - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்!

கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு சிறப்பு தனிப்படை அமைத்துள்ள நிலையில், கோவை கிணத்துக்கடவு பகுதியில் கடந்த 5 நாட்களாக கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்திய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கனிம வள கொள்ளை குறித்து செய்திகள் வெளியாகியது. இதை தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க தமிழக அரசு சிறப்பு தனிப்படைகளை அமைத்துள்ளது.

இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் தனிப்படை அமைத்தது முதல், கடந்த நான்கைந்து நாட்களாக குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் அள்ளப்படுவது குறைந்திருப்பதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்றி தெரிவித்து கடிதம் அளித்த விவசாயிகள், பாலக்காடு கணவாய்க்கு அருகில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் வழக்கமாக மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் விவசாயம் சிறப்பாக இருந்தது.

கடந்த ஒரு வருட காலமாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குவாரிகளால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்கள் சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்த சூழலில் கடந்த வாரம் தமிழக அரசு கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிறப்பு தனிப்படைகளை அமைத்திருந்தது.

அதனை தொடர்ந்து கடந்த நான்கு ஐந்து நாட்களாக குவாரிகளில் கனிம வளங்கள் எடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குவாரிகளிலிருந்து கனிமவள கொள்ளையில் ஈடுபடும் லாரிகளின் போக்குவரத்து இல்லாததால் பொதுமக்களும் விவசாயிகளும் சற்று நிம்மதி அடைந்திருக்கிறோம்.

அதற்கு தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. இந்த நடவடிக்கை தற்காலிக நடவடிக்கையாக இல்லாமல் நிரந்தரமான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...