கிணத்துக்கடவு அருகே பாறைகற்களை ஏற்றிவந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பாறைக்கற்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. கல்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கும் ரூ.96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு பாறைக்கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகள் சிறைபிடித்து, அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக பாறைகற்களை ஏற்றி, கேரளா மாநிலத்திற்கு லாரிகள் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இதுகுறித்து, கனிமவளத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர். முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் அருகில் அதிகபாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், அளவுக்கு அதிகமாக பாறை கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கும் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்களும், விவசாயிகளும் சிறைபிடித்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...