கிணத்துக்கடவு அருகே பாறைகற்களை ஏற்றிவந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பாறைக்கற்களை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. கல்குவாரிகளிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகளுக்கும் ரூ.96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.



கோவை: கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு பாறைக்கற்களை ஏற்றிச் சென்ற 2 லாரிகள் சிறைபிடித்து, அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கல்குவாரிகளிலிருந்து அளவுக்கு அதிகமாக பாறைகற்களை ஏற்றி, கேரளா மாநிலத்திற்கு லாரிகள் செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர்.

இதுகுறித்து, கனிமவளத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள 10 நெம்பர். முத்தூர், வன்னி குமாரசாமி கோவில் அருகில் அதிகபாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிறைபிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், அளவுக்கு அதிகமாக பாறை கற்களை ஏற்றி சென்ற 2 லாரிகளுக்கும் 96 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்களும், விவசாயிகளும் சிறைபிடித்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...