உதகை அருகே அதிகாலையில் உலா வந்த கரடியால் பரபரப்பு - சிசிடிவி வீடியோ

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகாலையில் கரடி ஒன்று உலா வந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.



நீலகிரி: உதகை அருகே அதிகாலை நேரத்தில் கரடி உலா வந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமடைந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவாகிறது. இதேபோல் இன்று அதிகாலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்காக எமரால்டு பஜார் பகுதிக்கு வந்தனர்.



அப்போது கரடி ஒன்று திடீரென வந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...