உதகை அருகே அதிகாலையில் உலா வந்த கரடியால் பரபரப்பு - சிசிடிவி வீடியோ

உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகாலையில் கரடி ஒன்று உலா வந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.



நீலகிரி: உதகை அருகே அதிகாலை நேரத்தில் கரடி உலா வந்ததால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு பகுதியில் சமீப காலமாக கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களுக்குள்ளும், வனப்பகுதிக்குள்ளும் செல்லும் வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித் திரிவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமடைந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவாகிறது. இதேபோல் இன்று அதிகாலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு செல்வதற்காக எமரால்டு பஜார் பகுதிக்கு வந்தனர்.



அப்போது கரடி ஒன்று திடீரென வந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...