தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய மாணவர்கள்!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி மத்திய பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதன்படி, தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகம், பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் மற்றும் உபயோகித்து வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் சேகரித்து பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சந்தனமாரி முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



முன்னதாக தாராபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் பயிற்சி அலுவலர்கள் சுப்பிரமணியன் மேகலிங்கம் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராமர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவையாற்றும் சிறப்புகள் குறித்து பாராட்டு தெரிவித்து பேசினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...