தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்திய மாணவர்கள்!

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் 30க்கும் மேற்பட்டோர் நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் படி மத்திய பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதன்படி, தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகம், பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் மற்றும் உபயோகித்து வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் சேகரித்து பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சந்தனமாரி முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகள் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்.



முன்னதாக தாராபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட துவக்க விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் பயிற்சி அலுவலர்கள் சுப்பிரமணியன் மேகலிங்கம் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராமர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவையாற்றும் சிறப்புகள் குறித்து பாராட்டு தெரிவித்து பேசினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...