தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் அதிகாரிகள், மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுடன், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் பணியின் போது கடை உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, டீக்கடை, பழக்கடை, செருப்பு கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.

தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்காருவதற்கு கூட இடமில்லாமல் ஆங்காங்கே கடும் வெயிலிலும் நின்றபடியே பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் இருந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தனர்.



அதன் அடிப்படையில் இன்று அதிரடியாக தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலையில், தாராபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர்.



அப்போது அங்கு ஒரு சில கடை உரிமையாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...