ஆதிதிராவிடர் மக்களின் நிலத்தை வாங்கி முறைகேடு - பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து பெற்றவர்களிடம் இருந்து மீட்டு, நிலம் இல்லாத மக்களுக்கு பெற்றுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஒடையகுளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் சக்தி நகர் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு 196 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.



இந்த இடத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட சிலர், அங்கு வீடு கட்டி குடியேறாமல் நிலத்தை விற்றுள்ளனர்.



பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டதாகவும் கூறி நிலம் கிடைக்காத ஆதி திராவிடர் மக்கள், மகாத்மா காந்தி ஆசிரமத்தினருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவர்கள், ஆதி திராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணத்தாசை காட்டி அவர்களிடம் குறைந்த விலைக்கு பெற்று வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப பெற்று, உரிய விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறிந்து, நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு பெற்று தர வேண்டும், என்றனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...