ஆதிதிராவிடர் மக்களின் நிலத்தை வாங்கி முறைகேடு - பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து பெற்றவர்களிடம் இருந்து மீட்டு, நிலம் இல்லாத மக்களுக்கு பெற்றுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஒடையகுளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் சக்தி நகர் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு 196 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.



இந்த இடத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட சிலர், அங்கு வீடு கட்டி குடியேறாமல் நிலத்தை விற்றுள்ளனர்.



பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டதாகவும் கூறி நிலம் கிடைக்காத ஆதி திராவிடர் மக்கள், மகாத்மா காந்தி ஆசிரமத்தினருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவர்கள், ஆதி திராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணத்தாசை காட்டி அவர்களிடம் குறைந்த விலைக்கு பெற்று வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப பெற்று, உரிய விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறிந்து, நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு பெற்று தர வேண்டும், என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...