கோவை மாநகராட்சிக்கு கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் நியமனம்

கோவை மாநகராட்சியின் கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் கூடுதல் துணை கமிஷனராக சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக எம்.பிரதாபும், துணை கமிஷனராக டாக்டர் ஷர்மிளாவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகராட்சியில் கூடுதல் துணை கமிஷனர் பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியில், ஈரோடு மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2021 நவம்பர் முதல் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக சிவக்குமார் இருந்தார். அதற்கு முன், சென்னை ஆவடி நகராட்சியின் இணை இயக்குனராக (நிர்வாகம்) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...