ஈஷா யோகா மையத்தின் சட்ட விரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு


ஈஷா யோகா மையத்தின் சட்ட விரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு மாவட்டத் தலைவர் மு.ஆனந்தன் மற்றும் மாவட்டச் செயலாளர் வி.சுந்தரமூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் தற்போது முட்டத்துவயல் பகுதியில் 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலையையும், பல்லாயிரம் சதுரடி பரப்பளவில் கட்டிடங்களையும், பூங்கா மற்றும் வாகன நிறுத்துமிடங்களையும் அரசு துறைகளின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஈஷா யோகா மையம் அமைந்துள்ள போளுவாம்பட்டி வனச்சரகம் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் நீராதாரமான நொய்யலின் நீர்பிடிப்பு பகுதியாகும். இப்பகுதி தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை 22.4.1990 தேதியிட்ட அரசாணை எண் ஜிஓ. எம்எஸ். எண். 44/ 1990-யின் மூலம் மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது.

இன்படி இக்குழுவின் அனுமதியின்றி விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ, 300 சதுர மீட்டருக்கு மேல் எந்த கட்டிடங்களும் கட்டவோ கூடாது.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் வனம், வருவாய், நகர் ஊரமைப்புத் துறை, பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரப் பிரிவு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண் பொறியியல், மின்சாரம், தீயணைப்பு, காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சி, கனிம வளம் ஆகிய துறைகளிடமிருந்து தடையின்மைச் சான்றுகள் பெற வேண்டும்.

இதேப் போன்ற நிபந்தனைகள் வீட்டுவசதி மற்றும் நகர் வளர்ச்சித் துறையின் 24.3.2003 தேதியிட்ட அரசாணை எண் ஜிஓ. எம்எஸ். எண் 49/2003 மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டுமான விதிகள் 1997 விதி 25 பொதுப்பயன்பாட்டு கட்டுமானங்களுக்கு பஞ்சாயத்து செயல் அதிகாரி, நகர் ஊரமைப்புத் துறையின் ஆலோசனை இல்லாமல் அனுமதியளிக்கக் கூடாது என்கிறது.

மேலும், விதி 4 (3) பொது வழிப்பாடு அல்லது மத பயன்பாட்டு கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயமாகும்.

ஆனால் ஈஷா யோகா மையத்தில் ஏற்கனவே உள்ள பல லட்சம் சதுரடி கட்டிடங்கள் மேற்சொன்ன எந்த அரசுத் துறைகளின் அனுமதியையும் பெறாத சட்டவிரோத கட்டிடங்கள் ஆகும். 

எனவே நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் 5.11.2012 தேதியிட்ட ந.க.எண் 1866/2012/கோ.ம.4 ஆணையின் மூலம் சட்ட விரோத கட்டுமானப் பணிகள் நிறுத்த உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதனையும் மீறி இந்த சட்ட விரோத கட்டிடங்கள் கட்டி மடிக்கப்பட்டுள்ளதால் அதனை மூடி முத்திரையிடும் படி நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் 21.12.2012 மற்றும் 26.11.2014 ஆகியதேதிகளில் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு இதுநாள் வரை அமல்படுத்தப்படவில்லை.

இதேப் போன்று வனத்துறை, ஊராட்சி, மாவட்ட நிர்வாகத் தரப்பில் பலமுறை ஈஷா யோகா மையத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்தும், அதனை மூட உத்தரவிட்டும் ஈஷா யோகா மைய நிர்வாகத்தினர் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும், தொடர்ந்து வனப் பகுதிகளை அழித்தும், வன உயிரினங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தியும் வருகின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் ஈஷா யோகா மையம் கட்டியுள்ள அனைத்து அரசு துறைகளின் அனுமதி பெறாத சட்ட விரோத கட்டிடங்களை இடிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...