கோவை விமானநிலையத்தில் இருந்து 3 மாதத்தில் 324 டன் ஏற்றுமதி இறக்குமதி!

கோவை விமான நிலையத்தில் இருந்து ஜனவரி மாதம் 94 டன் பொருட்கள், பிப்ரவரி மாதத்தில் 83 டன் பொருட்கள், மார்ச் மாதம் 117 டன் சரக்குகள் என 3 மாதங்களில் 324 டன் அளவுக்கு வெளிநாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சரக்கக வளாகத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சரக்கு போக்குவரத்து கையாளப்படுகிறது. உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஜவுளிப்பொருட்கள், பொறியியல் உற்பத்தி பொருட்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் அதிகளவு கையாளப்படுகின்றன.

வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் காய்கறிகள், பழங்கள், பொறியியல் உற்பத்தி பொருட்கள் கையாளப்படுகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும்117 டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

வெளிநாட்டு சரக்கு போக்குவரத்து பிரிவில் வழக்கமாக காய்கறிகள் மற்றும் பழங்கள்தான் அதிகம் கையாளப்படும். கடந்த மூன்று மாதங்களாக காய்கறி, பழங்களுடன் பொறியியல் துறை சார்ந்த பொருட்களும் அதிகளவு கையாளப்படுகின்றன.

ஜனவரி மாதம் 94 டன் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பிப்ரவரி மாதத்தில் 83 டன்னாக சற்று குறைந்த நிலையில், மார்ச் மாதம் 117 டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜனவரியில் தொடங்கி மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டும் சேர்த்து மொத்தம் 324 டன் எடையிலான பொருட்கள் கையாளப்பட்டுள்ளன.

எதிர்வரும் மாதங்களிலும் வெளிநாடுகளுக்கு கையாளப்படும் சரக்குகளின் அளவு அதிகரிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...