பொள்ளாச்சியில் அரசுப்பேருந்து மீது சொகுசு கார் மோதி விபத்து - புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி!

பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அரசுபேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில், அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த புதுமாப்பிள்ளை பாலாசுகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாலாசுகேஷ் (வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பாலாசுகேஷுக்கும் பொள்ளாச்சி ஜமீன்கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த யாஷிகா (வயது23) என்ற பெண்ணிற்கும் அடுத்த வாரம் திருமண நிச்சயம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று யாசிகாவை பார்க்க பொள்ளாச்சி வந்த பாலாசுகேஷ் வெளியில் சுற்றி பார்க்க செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, யாசிகா மற்றும் பாலாசுகேஷ் இருவரும் தனது சொகுசு காரில் ஆழியாரை சுற்றி பார்க்க சென்றனர்.



அப்போது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப்பேருந்து மீது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், படுகாயமடைந்த பாலாசுகேஷ் வழியிலேயே உயிரிழந்தார். யாஷிகாவிற்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் காவல்நிலைய போலீசார் பாலசுகேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...